செய்திகள்
கோகிலாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் பிச்சைமணி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சுந்தர் வரவேற்றார். இந்த முகாமில் உத்தமபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன், ராயப்பன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பவுமிகா ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். இதில் கோகிலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.