செய்திகள்
கைது

கோவையில் குடும்பத்தகராறில் மனைவி, மாமியாரை வெட்டிய போலீஸ்காரர் கைது

Published On 2019-12-06 13:09 GMT   |   Update On 2019-12-06 13:09 GMT
குடும்பம் நடத்த மனைவியை மாமியார் அனுப்பாததால் ஆத்திரம் அடைந்த பேலீஸ்காரர் 2 பேரையும் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பேரூர்:

கோவை அடுத்த கோவைபுதூர் சிறுவாணி நகரை சேர்ந்தவர் அய்யலு கணேஷ் (வயது 37). போத்தனூரில் போக்கு வரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் ஸ்ரீஜா (34) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் மனைவியின் நடத்தையில் போ லீஸ்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஸ்ரீஜாவின் தாய் ஓமனா அதே பகுதியில் உள்ள சுண்டக்காமுத்தூர் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.

கணவன்- மனைவி தகராறால் வெறுப்படைந்த ஸ்ரீஜா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அய்யலு கணேஷ் மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு மனைவியை சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்தவருமாறு அழைத்தார். இதற்கு மனைவி மற்றும் மாமியார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அய்யலு கணேஷ் அங்கு கிடந்த அரிவாளை எடுத்து மனைவி ஸ்ரீஜா மற்றும் மாமியார் ஓமனாவை கை, இடுப்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் வெட்டினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் ஸ்ரீஜாவும், அவரது தாய் ஓமனாவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் அய்யலு கணேசை கைது செய்தனர். இதையடுத்து அவரை சஸ்பெண்டு செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News