செய்திகள்
கோப்புபடம்

புதுவையில் பிரெஞ்சு கல்லூரி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2021-09-09 15:26 GMT   |   Update On 2021-09-09 15:26 GMT
புதுவையில் பிரெஞ்சு கல்லூரி பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை வாணரப்பேட்டை ஜெயராம் செட்டியார் தோட்டம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காமாட்சி ரீத்தா. இவரது மகள் மிரைலோர் (வயது 32). இவர் புதுவையில் உள்ள அலியான்பிரான்ஸ் பிரெஞ்சு கல்லூரியில் நூலக காப்பாளராக கடந்த சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். பின்னர் அந்த வேலையை அவர் கைவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.

எப்போதும் தனிமையிலேயே இருக்கும் மிரைலோர் சில நேரங்களில் சாப்பிடமாட்டார். குடும்பத்தினர் வற்புறுத்தி சாப்பிட அழைத்தால் மட்டுமே மிரைலோர் சாப்பிடுவார்.

இந்த நிலையில் மனநோயாளி போல் இருந்து வந்த மிரைலோர் அறை கதவு நேற்று மாலை வெகுநேரமாக அவரது திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின்விசிறியில் மிரைலோர் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவரது சகோதரர் நெய்வர்கிள மெண்ட் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மிரைலோர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாஸ்பேட்டை வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் முகமது தல்ஹா. இவரது மகன் முகமது ஹஷீப் (26). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட முகமது ஹஷீப் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று விட்டார். உடனே அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து கன்னியாகுமாரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முகமது ஹஷீபை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முகமது ஹஷீப் இறந்து போனார்.

இதுகுறித்து அவரது சகோதரர் முகமது ஜிபைர் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News