செய்திகள்
நாகூர் பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை
நாகை நகராட்சி சார்பில் நாகூர் பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
நாகூர்:
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று நாகை நகராட்சி சார்பில் நாகூரில் பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் இருக்கிறதா? ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாகூரில் நகராட்சி உட்பட்ட 11 வார்டுகளிலும் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். 2 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்தவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்களது மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படு்ம். இதேபோல் தைக்கால் தெரு, செய்யது பள்ளி தெரு, பீரோடும் தெரு ஆகிய பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.