உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கோவையில் தங்க நகை தொழிலாளி தற்கொலை

Published On 2021-12-06 11:03 GMT   |   Update On 2021-12-06 11:03 GMT
கோவையில் தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாப்பா மாஜி (வயது 19). தங்க நகை தொழிலாளி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் தெலுங்கு வீதியில் தங்கி இருந்து அங்குள்ள தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அறையில் இருந்த பாப்பா மாஜி குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News