செய்திகள்
வைகை அணை

56 அடியை எட்டிய வைகை அணை நீர் மட்டம்

Published On 2019-09-18 07:57 GMT   |   Update On 2019-09-18 07:57 GMT
பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர் மட்டம் 56 அடியை நெருங்கியுள்ளது.
கூடலூர்:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 131 அடியை தாண்டியது. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்கும், வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களாக மழையின் அளவு படிப்படியாக குறைந்த முற்றிலும் நின்று விட்டது. இருந்த போதும் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணையின் நீர் மட்டம் 56 அடியை நெருங்கி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.20 அடி. வரத்து 285 கன அடி. திறப்பு 1660 கன அடி. இருப்பு 4309 மில்லியன் கன அடி. வைகை அணையின் நீர் மட்டம் 55.79 அடி. வரத்து 1396 கன அடி. திறப்பு 960 கன அடி. இருப்பு 2846 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 35.36 அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 85.28 அடி.

Tags:    

Similar News