செய்திகள்
நீதிபதி பி.ஆர் கோகுலகிருஷ்ணன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர் கோகுலகிருஷ்ணன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். கோகுலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் மயிலாப்பூர் இல்லத்தில் நடைபெற உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த நீதியரசர் கோகுலகிருஷ்ணன் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர் . சட்ட நுணுக்கங்களில் மட்டுமின்றி சமூக நலப் பணிகளிலும் மிகுந்த ஆர்வமிக்கவராக விளங்கியவர் என குறிப்பிட்டுள்ளார்.