ஆன்மிகம்
மாசி திருவிழாவையொட்டி சுசீந்திரம் கோவிலில் தேரோட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழாவின் இறுதி நாளன்று இந்திரன் தேர் ஆகிய சப்பரத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மனை எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழா நடந்தது. தாணுமாலய சாமிக்கும், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கும் திருமண வைபவம் நடந்தது.
திருக்கல்யாண விழாவின் இறுதி நாளன்று இந்திரன் தேர் ஆகிய சப்பரத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மனை எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம் முழங்க நான்கு ரத வீதிகள் வழியே தேர் வலம் வந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.