செய்திகள்
கோப்புபடம்

ஓசூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2020-10-16 09:18 GMT   |   Update On 2020-10-16 09:18 GMT
ஓசூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:

பாகலூர் அருகே உள்ள குட்டலப்பள்ளியை சேர்ந்தவர் சீனப்பா. இவரது மனைவி முனியம்மா (வயது 28). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் முனியம்மாவின் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

இந்த நிலையில் மனவருத்தத்தில் காணப்பட்ட முனியம்மா விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிரஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News