செய்திகள்
திருட்டு

ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் 5½ பவுன் சங்கிலி திருட்டு

Published On 2021-10-26 14:56 GMT   |   Update On 2021-10-26 14:56 GMT
ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் 5½ பவுன் சங்கிலி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம்:

கரூரிலிருந்து தனியார் பஸ் ஒன்று திருச்சியை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் ராஜலட்சுமி என்பவர் அணிந்திருந்த 2½ பவுன் சங்கிலி, விஜயலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை திருடி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அவர்கள் 2 பேரும் மாயனூர் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News