செய்திகள்
கோப்பு படம்.

கேரளாவில் இன்று புதிதாக 2,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-03-04 17:15 GMT   |   Update On 2021-03-04 17:15 GMT
கேரளாவில் இன்று ஒரே நாளில் 4,156 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 2,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,69,661 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 4,255 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 4,156 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10,20,671 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 44,441 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முன்னதாக கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த ஆறு மாநிலங்களில் புதிய கொரோனா பாதிப்புகள் 85.51 சதவீதம் உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News