உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மஞ்சூர் அருகே கோவில் திருவிழாவில் மோதல்

Published On 2022-04-17 08:44 GMT   |   Update On 2022-04-17 08:44 GMT
திருவிழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

மஞ்சூர்: 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கொட்டரகண்டி. இப்பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 14ந் தேதி முதல் கொண்டாப்பட்டது. 

இந்நிலையில் கடந்த வியாழன் இரவு திருவிழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

இதில் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (25) என்பவருக்கும்,  அவரது உறவினரான ரவிக்குமார் (52) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆவேசம் அடைந்த கிருஷ்ணசாமி,  ரவிக்குமாரின் வலது கை பெரு விரலை பலமாக கடித்துள்ளார். 

விரலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதால் வலியில் ரவிக்குமார் துடித்துள்ளார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ரவிக்குமாரை உடனடியாக மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ரவிக்குமார் ஊட்டிக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த மஞ்சூர் போலீசார் தொடர் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News