உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே மகனுடன் தாய் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பழவேற்காடு கோட்டை குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சவுமியா (வயது26). இவரது மகன் லஷன் (3). சம்பவத்தன்று வீட்டில் இருந்து மகனுடன் வெளியே சென்ற சவுமியா பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.