செய்திகள்
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

இலுப்பை பூவில் தயாரிக்கப்படும் சாராயத்தை பாரம்பரிய மதுபானமாக விற்க ம.பி. அரசு முடிவு

Published On 2021-11-24 05:52 GMT   |   Update On 2021-11-24 09:19 GMT
மத்திய பிரதேசத்தில் சாராயத்தை இலுப்பை பூவைக் கொண்டு தயாரிப்பது மூலம், பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் தரும் என்று மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்:

மத்தியப் பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் நாள் கொண்டாட்டத்தில், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

புதிய கலால் கொள்கையின்படி, பாரம்பரிய வழியில் இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும் சாராயம் இனி சட்டவிரோதம் ஆகாது. இது 'பாரம்பரிய மதுபானம்' என்ற பெயரில் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும். இலுப்பை பூ பயன்படுத்துவதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் ஏற்படுத்தி தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.



பாஜக தலைமையிலான மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் பாரம்பரிய மதுபான விற்பனை முயற்சியை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இது பாஜகவின் தார்மீக வீழ்ச்சி என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறி உள்ளார்.

மேலும், "சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மூலிகை சாராயத்தை சட்டப்பூர்வமாக்கும் முடிவை அரசு எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது" என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News