செய்திகள்
கோவையில் ரெயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு
கோவை நவக்கரை அருகே ரெயில் மோதிய விபத்தில் 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.
கோவை:
தமிழகம் - கேரள எல்லைப் பகுதியான கோவை நவக்கரை அருகே ரெயில் மோதிய விபத்தில் 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.
தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது கேரளாவில் இருந்து வந்த ரெயில் மோதி 3 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.
தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை விபத்து குறித்து விசாரணை நடததி வருகின்றனர்.