செய்திகள்
ஷபாலி வர்மா

பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 96 ரன்கள் விளாசிய ஷபாலி வர்மா

Published On 2021-06-17 17:30 GMT   |   Update On 2021-06-17 17:30 GMT
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 396 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்த நிலையில், இந்திய தொடக்க ஜோடி நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தது.
இந்தியா- இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிரிஸ்டோலில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டாமி பியுமோன்ட் 66 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 95 ரன்களும் விளாச நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து பெண்கள் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்ததுது. சோபியா டங்க்ளி 12 ரன்னுடனும், கேதரின் ப்ருன்ட் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதும் கேதரின் ப்ருன்ட் மேலும் ஒரு ரன்கள் சேர்த்து 8 ரன்னில் ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சோபி எக்லேஸ்டோன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

9-வது விக்கெட்டுக்கு சோபியா டங்க்ளி உடன் அனியா ஷ்ரப்சோல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. சோபியா அரைசதம் விளாச, அனியா அரைசதத்தை நோக்கி சென்றார். என்றாலும் 47 ரன்னில் வெளியேறினார். அப்போது இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் ஸ்னே ராணா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.



பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். இருவரும் இங்கிலாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இருவரும் அரைசதம் விளாசினர்.

ஷபாலி வர்மா சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 96 ரன்கள் எடுத்த நிலையில் கிராஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 78 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்தது. இந்தியா 57 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News