செய்திகள்
தற்கொலை

சேலம் அம்மாபேட்டையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-22 22:15 GMT   |   Update On 2021-01-22 22:15 GMT
சேலம் அம்மாபேட்டையில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:

சேலம் அம்மாபேட்டை பெருமாள் கோவில் மேட்டை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த காஞ்சனா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சனா தற்கொலையின் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News