ஆட்டோமொபைல்
மாருதி இகோ

40 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெறும் மாருதி சுசுகி

Published On 2020-11-06 11:24 GMT   |   Update On 2020-11-06 11:24 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 40 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது.


மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இகோ எம்பிவி மாடலை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. ஹெட்லேம்ப் யூனிட்டில் ஸ்டான்டர்டு லோகோ இல்லாததே இந்த மாடல் திரும்ப பெறுவதற்கான காரணமாக இருக்கும் என தெரிகிறது. 

ஹெட்லேம்ப்பில் எவ்வித கோளாறும் ஏற்படல்லை. எனினும், சிறு மாற்றம் செய்வதற்காகவே மாஸ் ரீகால் செய்கிறது. நவம்பர் 4, 2019 முதல் பிப்ரவரி 25, 2020 வரையிலான காலக்கட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் திரும்ப பெறப்படுகின்றன. 



தற்போதைய தகவல்களின் படி மொத்தம்40,453 இகோ எம்பிவி யூனிட்களை மாருதி சுசுகி திரும்ப பெறுகிறது. ரீகால் செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும் இலவசமாக சரி செய்து தரப்படுகிறது.

ரீகால் செய்யப்பட வேண்டிய யூனிட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை மாருதி சுசுகி தொடர்பு கொள்ளும். பின் வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களுக்கு சென்று வாகனங்களை சரிசெய்து திரும்ப பெறலாம்.
Tags:    

Similar News