செய்திகள்
கைது

அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது

Published On 2019-11-11 08:51 GMT   |   Update On 2019-11-11 08:51 GMT
அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 4 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த நாயக்கர் பட்டியில் அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா, தாசில்தார் சூரிய பிரபு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அது ஆலங்குடி அருகே உள்ள வெள்ளக்கொல்லை பகுதியிலிருந்து ஏற்றி வரப்பட்டதும் தெரியவந்தது.

உடனே அதிகாரிகள் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அறந்தாங்கி போலீசார் மணல் கடத்திய லாரி ஓட்டுனர்கள் முருகானந்தம், பாலமுருகன், ரவிச்சந்திரன், சசிக்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு கைது செய்தனர்.


Tags:    

Similar News