செய்திகள்
பராமரிப்பற்ற சுகாதார வளாகம்.

சாத்தூர் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-01-10 11:51 GMT   |   Update On 2021-01-10 11:51 GMT
சாத்தூர் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்:

சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது இந்த வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது.

இங்கு உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் தீப்பெட்டி, பட்டாசு போன்ற தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களில் எண்ணற்ற பேர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு சுகாதார வளாகம் இருந்தும் அதனை திறக்காததால் இப்பகுதியில் உள்ள பெண்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர்.

ஆதலால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்றுநோய் பரவும் அபாயநிலையும் நிலவுகிறது. எனவே பராமரிப்பற்ற இந்த சுகாதார வளாகத்தை உடனே சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News