செய்திகள்
தற்கொலை

கீழக்கரையில் தபால் ஊழியர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-09-15 06:19 GMT   |   Update On 2020-09-15 06:19 GMT
ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தபால் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தபால் ஊழியர் ராமகிருஷ்ணன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, தங்கவேலே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

கடிதத்தை பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News