இஸ்லாம்
நாகூர் தர்கா

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி

Published On 2022-01-01 07:57 GMT   |   Update On 2022-01-01 07:57 GMT
நாகூர் தர்காவில் இன்று 1-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு கந்தூரி விழா வருகிற 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி இன்று 1-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.

அப்போது, கூடியிருந்த இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 4-ந் தேதி கொடியேற்று வைபவமும், தொடர்ந்து வரும் 13-ந்தேதி நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News