உள்ளூர் செய்திகள்
கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ராம் நகர், தனியார் திருமண மஹாலில், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் பொது மக்களிடமிருந்து 1,028 கோரிக்கை மனுக்கள் பெற்று, நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக அரசின் உத்தரவின்படி, வார ந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலும், மாத ந்தோறும் ஏதேனும் ஒரு வருவாய் கிராமத்திலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற்று, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதனால் ஏற்படும் நேரம் விரையம் மற்றும் பொருளாதார விரையத்தை தவிர்த்திடும் வகையிலும் பொதுமக்களுக்கு விரை வாக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், வட்ட அளவில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
காளையார்கோவில், மானாமதுரை, காரை க்குடியைத் தொடர்ந்து தற்போது தேவகோட்டை வட்டத்தில் நடத்தப்படுகிறது. அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து பெற ப்படும் மனுக்களை ஏடுகளில் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட துறை அலுவ லர்கள் தீர்வு வேண்டும்.
அலுவலர்கள் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வாராந்திர அறிக்கை வழங்க வேண்டும். மனுக்கள் மீது ஆய்வு செய்து தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.