செய்திகள்

வத்தலக்குண்டு அருகே காதல் பிரச்சினையில் பல் டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2018-09-07 09:09 GMT   |   Update On 2018-09-07 09:09 GMT
வத்தலக்குண்டுவில் காதல் பிரச்சினையில் பல் டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரி அருகே வசித்து வருபவர் முஜிபூர்ரகுமான் (வயது39). மெயின்ரோட்டில் தனியார் பல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இங்கு செவிலியராக ஒரு பெண் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் எம்.வாடிப் பட்டியை சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பிரிந்து சென்றனர்.

அதன்பின்பு முருகன் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்து அந்த பெண்ணை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் முஜிபூர் ரகுமான் அவரை தடுத்து கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் முஜிபூர் ரகுமானை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News