செய்திகள்
விபத்து

திருமங்கலம் அருகே விபத்து: முன்னாள் ராணுவ வீரர் பலி

Published On 2019-11-04 09:52 GMT   |   Update On 2019-11-04 09:52 GMT
திருமங்கலம் அருகே விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை கே.புதூர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 62). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று தனது மனைவி உமா கல்யாணி, மகன் ஜான்ரூபன், மகள் ஜெரோனி, உறவினர் லதா ராணி ஆகியோருடன் திருமங்கலத்துக்கு காரில் புறப்பட்டார்.

தனக்கன்குளம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றனர்.

அப்போது திருமங்கலத்தில் இருந்து மாட்டுத்தாவணி சென்ற அரசு பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

உமா கல்யாணி, ஜான் ரூபன், ஜெரோனி, லதா ராணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News