விளையாட்டு
ஹர்திக் பாண்ட்யா, ஷிகர் தவான்

மூத்த வீரர்களுக்கு ஓய்வு - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் இவரா?

Published On 2022-05-14 16:41 GMT   |   Update On 2022-05-14 16:41 GMT
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டி ஜூன் 9 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி:

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் ஜூன் 9 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார் என்பதால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Tags:    

Similar News