செய்திகள்
கோப்புபடம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-02-19 14:26 GMT   |   Update On 2021-02-19 14:26 GMT
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கல்:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் என்.எம்.அபுபக்கர், மாவட்ட குழு உறுப்பினர் சிவகுமார், மாநில குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், சந்திரசேகர், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர் இதேபோல சிக்கல். கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபா‌‌ஷ் சந்திரபோஸ், ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய குழு உறுப்பினர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், கோவை. சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், வெற்றியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News