ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவில்

சோலைமலை முருகன் கோவிலில் மகா சிவராத்திரி விழா

Published On 2021-03-06 09:12 GMT   |   Update On 2021-03-06 09:12 GMT
அழகர் மலை உச்சியில் அமைந்துள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறும்.
அழகர் மலை உச்சியில் அமைந்துள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில். இந்த கோவிலில் வருடந்தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறும்.

விழாவில் மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு இரவு 8 மணி முதல் கால பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 2-ம் கால பூஜை இரவு 10.30 மணிக்கும், 3-ம் கால பூஜை 12 மணிக்கும் நடை பெறுகிறது.

பின்னர் 4-ம் கால பூஜை 1.30 மணிக்கும் அர்த்த சாம பள்ளியறை பூஜை அதிகாலை 3 மணிக்கும் நடைபெற்று நடை சாத்தப்படுகிறது. இதில் முன்னதாக பல்வேறு பூஜைகளும் அலங்கார பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெறுகிறது.
Tags:    

Similar News