செய்திகள்
அரசு பஸ் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் வீ.கோட்டா-குப்பம் நெடுஞ்சாலையில் குப்பம் மண்டலம் தாசார்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தப்பா (வயது 65). இவர் தாசார்லப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக குப்பத்தை நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. அதில் கோவிந்தப்பாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லமராஜு , உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மல்லப்பா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.