செய்திகள்
11 பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்

11 பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்

Published On 2019-11-28 02:26 GMT   |   Update On 2019-11-28 03:12 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் 11 பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 42 வயதான பெண் 12-வதாக ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
ஜெய்ப்பூர் :

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம், ஜாத்சர் நகரை சேர்ந்த கதி (வயது 42) என்ற பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஆஸ்பத்திரியில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

அந்த பெண்ணுக்கு இது 12-வது குழந்தை ஆகும். ஏற்கனவே அவர் 11 பிள்ளைகளை பெற்று இருக்கிறார். அனைவருமே பெண் பிள்ளைகள்.

மூத்த மகளுக்கு 22 வயது ஆகிறது. இதுவரை 2 மகள்களுக்கு திருமணம் முடிந்து இருக்கிறது.

ஆண் குழந்தை பிறந்ததில் கதியும் அவருடைய கணவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமா ‘குட்டி தம்பி’ பிறந்த மகிழ்ச்சியில் 11 சகோதரிகளும் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படுவது மனித இயல்பு. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ஆண் குழந்தை பிறக்காதா? என்று ஆசைப்படுகிறார்கள். ஆண் குழந்தைகளை பெற்றவர்கள் பெண் குழந்தை பிறக்காதா? என்று கவலைப்படுகிறார்கள்.

கதி என்ற பெண்ணும் அப்படி ஆசைப்பட்டதின் விளைவுதான் 11 பெண் குழந்தைகளை பெற்ற பிறகும் 12-வதாக முயன்று ஆண் குழந்தையை பெற்று நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். 
Tags:    

Similar News