செய்திகள்
கோப்புப்படம்

முகநூல் மூலம் அறிமுகமான பெண் வீட்டில் சென்னை வாலிபர் தற்கொலை

Published On 2021-02-22 19:41 GMT   |   Update On 2021-02-22 19:41 GMT
முகநூல் மூலம் அறிமுகமான பெண் வீட்டில் சென்னை வாலிபர் தற்கொலை

திருவண்ணாமலை:

முகநூல் மூலம் அறிமுகமான பெண் வீட்டில் சென்னை வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கணவர், குழந்தைகள் இருப்பதை மறைத்து காதல் செய்ததை அறிந்ததால் அந்த வாலிபர் சோக முடிவை எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கீழ்பாலூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் கணவர், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கும் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த பூபதி (24) என்ற வாலிபருக்கும் முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. அந்த நட்பால் பெண்ணுடன் பூபதிக்கு காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணும் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து காதல் வார்த்தைகள் பதிவிட்டு பூபதியுடன் பழகி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று பூபதி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததும் மனமுடைந்த பூபதி அந்த பெண்ணின் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பூபதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News