செய்திகள்
கைது

இருசக்கர வாகன கொள்ளையர்கள் கைது

Published On 2021-08-07 11:05 GMT   |   Update On 2021-08-07 11:05 GMT
இருசக்கர வாகன கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமேசுவரம் புதுரோடு சுனாமி காலனியை தேர்ந்தவர் தீபன் குமார். இவரது மகன்கள் கபிலன் (வயது 18), மாதேஷ் (எ) பூச்சி (17).இவர்கள் இருவரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். ராமேசுவரம் வீட்டில் பதுங்கி இருந்த போது போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் இளையான்குடி தாலுகா, பெரும்பச்சேரி சேதுபதிநகரை சேர்ந்த முருகேசன் மகன் மணி (எ) மணிகண்டன் மற்றும் சிவகங்கை மாவட்டம், கொம்படி மதுரையை சேர்ந்த அர்ச்சுனன் மகன் மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிகண்டன், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வேல் முருகன், ராமேசுவரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் மற்றும் பரமக்குடி, ராமேசுவரம் உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பாராட்டினார்.

Tags:    

Similar News