ஆன்மிகம்
முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகப்பெருமானுக்கும் ஆறுபடை வீடுகள் அமைந்திருக்கின்றன.
முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகப்பெருமானுக்கும் ஆறுபடை வீடுகள் அமைந்திருக்கின்றன.
திருநாரையூர் கோவிலில் வீற்றிருக்கும் ‘பொல்லாப் பிள்ளையார்’, திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ‘ஆழத்து விநாயகர்’, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் ‘சித்தி விநாயகர்’, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்குள் இருக்கும் ‘கள்ளவாரண பிள்ளையார்’, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ‘அல்லல் தீர்த்த விநாயகர்’, காசி எனப்படும் வாரணாசியில் உள்ள ‘துண்டிராஜகணபதி’.
இந்த 6 ஆலயங்களும்தான், விநாயகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளாகும்.
திருநாரையூர் கோவிலில் வீற்றிருக்கும் ‘பொல்லாப் பிள்ளையார்’, திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ‘ஆழத்து விநாயகர்’, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் ‘சித்தி விநாயகர்’, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்குள் இருக்கும் ‘கள்ளவாரண பிள்ளையார்’, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ‘அல்லல் தீர்த்த விநாயகர்’, காசி எனப்படும் வாரணாசியில் உள்ள ‘துண்டிராஜகணபதி’.
இந்த 6 ஆலயங்களும்தான், விநாயகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளாகும்.