செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

Published On 2021-10-09 11:56 GMT   |   Update On 2021-10-09 11:56 GMT
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலியாகினர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதனிடையே மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர். மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 391பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 28 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 387 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 268 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,939 ஆகும்.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 45 வயது பெண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 23 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

இதுவரை மாவட்டம் முழுவதும் 43 ஆயிரத்து 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 42 ஆயிரத்து 440 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 335 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 346 ஆக உள்ளது.
Tags:    

Similar News