செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் வாலிபர்களிடம் கவர்ச்சியாக பேசி உல்லாசத்திற்கு அழைத்த பெண் கைது

Published On 2021-07-21 11:25 GMT   |   Update On 2021-07-21 11:25 GMT
கலைச்செல்வி வாலிபர்களின் செல்போனுக்கு போன் செய்து உல்லாசத்திற்கு அழைத்து பணம் பறித்துள்ளது தெரியவந்தது.
திருப்பூர்:

மதுரையை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 33). திருப்பூர் ராதாநகர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், கணேஷ்குமாரிடம் கவர்ச்சியாக பேசியதுடன் உல்லாசத்திற்கு  அழைத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ்குமார் இது குறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில்  அந்த பெண் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர்.
 
அப்போது பல்வேறு வாலிபர்களின் செல்போனுக்கு போன் செய்து உல்லாசத்திற்கு அழைத்து பணம் பறித்துள்ளது தெரியவந்தது. மேலும்  வீட்டில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து விபசாரம் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த  வீட்டில் இருந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.
Tags:    

Similar News