ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் வேணு வனத்தில் சுவாமி தோன்றிய நிகழ்ச்சி
நெல்லையப்பர் கோவிலில் வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் மூங்கிலுக்கு நடுவே சுவாமி எழுந்தருளினார்.
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்து வருகின்றன.
நேற்று வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் மூங்கிலுக்கு நடுவே சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, பேஸ்கர் முருகேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
தொடர்ந்து வீதி உலா நடந்தது. 10-ம் நாள் திருவிழா வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அம்பாள் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
நேற்று வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் மூங்கிலுக்கு நடுவே சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, பேஸ்கர் முருகேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
தொடர்ந்து வீதி உலா நடந்தது. 10-ம் நாள் திருவிழா வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அம்பாள் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.