செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் தியேட்டர் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு- அமைச்சர் கடம்பூர் ராஜு

Published On 2020-09-05 09:08 GMT   |   Update On 2020-09-05 09:08 GMT
தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து செயல்பாடு தொடங்கிவிட்ட நிலையில், தற்போது 7-ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இருப்பினும், திரையங்கங்கள் திறப்பதற்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். நாளை மறுநாள் திரைத்துறையினருடன் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News