உள்ளூர் செய்திகள்
தங்கமுத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

Published On 2022-04-17 08:10 GMT   |   Update On 2022-04-17 08:10 GMT
பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது.
பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் 55-ம் வருட சித்திரா பவுர்ணமி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் 108 சிவாலயம் அருகில் குடமுருட்டி ஆற்றிலிருந்து சக்தி கரகம், பால்குடம் அலகு காவடி புறப்பட்டு தெற்கு ராஜவீதி, மேலவீதி, வடக்குவீதி கீழவீதி ஆகிய முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.மதியம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது.

மாலையில் அம்மன் வீதியுலா காட்சி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்று வந்தடைந்தது. விழாவில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், பாபநாசம் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், பிரேம்நாத் பைரன், மற்றும் சித்ரா பவுர்ணமி விழா குழுவினர், பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Tags:    

Similar News