தொழில்நுட்பச் செய்திகள்
யூபிஐ123 பே

யூபிஐ123 பே சேவையில் இணைந்துள்ள 37,000 பயனர்கள்

Published On 2022-03-30 07:49 GMT   |   Update On 2022-03-30 07:49 GMT
பெரும்பாலான பயனர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறி வருவதால், இந்த யூபிஐ123 பே சேவைக்கு வரவேற்பு இருக்காது எனவும் கருதப்படுகிறது.
ஸ்மார்ட்போன், இணையவசதி இல்லாமல் யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்பும் யூ.பி.ஐ123பே வசதியை இந்த மாதம் தொடக்கத்தில் இந்திய அரசு அறிமுகம் செய்தது.

இன்று வரை 37,000 பயனர்கள் இந்த யூ.பி.ஐ123 பே சேவையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21,833 வெற்றிகரமான பரிவர்த்தனைகளும் அச்சேவையின் மூலம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த யூபிஐ சேவையை இந்தியாவிற்கு வெளியேயும் கொண்டு செல்ல NPCI திட்டமிட்டு வருகிறது. தற்போது BHIP UPI-ஐ சிங்கப்பூர், பூடான், ஐக்கிய அரபு அமீரகம், நேபால் ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதை தொடர்ந்து யூபிஐ123 பேவையும் கொண்டு சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அதேசமயம் பெரும்பாலான பயனர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறி வருவதால், இந்த யூபிஐ123 பே சேவைக்கு வரவேற்பு இருக்காது எனவும் கருதப்படுகிறது.
Tags:    

Similar News