செய்திகள்
கொள்ளை

வேலூர் விருப்பாட்சிபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

Published On 2019-10-21 11:00 GMT   |   Update On 2019-10-21 11:00 GMT
வேலூர் விருப்பாட்சிபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது60). ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி. இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருநாவுக்கரசு பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News