உள்ளூர் செய்திகள்
கோவில் திருவிழா

சித்திரை திருவிழா

Published On 2022-05-05 10:51 GMT   |   Update On 2022-05-05 10:51 GMT
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
சிவகாசி

சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

3-ம் நாளான இன்று  (வியாழக்கிழமை) சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் காளீஸ்வரி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜி  சார்பில் இரவு 7 மணிக்கு மேல்கடை கோவிலில் இருந்து அம்மன் கைலாச பர்வத வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது.  

ரதவீதியில் வலம் வரும் சமயத்தில் கேரள பாரம்பரியமிக்க அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம், ஸ்ரீவிநாயகர், பைரவி, தத்ரூப காட்சிகள் சிறப்பு ஒலி -ஒளியுடன் கூடிய அழகுரதங்கள் முன்செல்ல பத்ரகாளி அம்மன் நகர்வலம் விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்குமாறு காளீஸ்வரி நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும் நிர்வாகத்தின் சார்பில் விஜய்டிவி சூப்பர் சிங்கர் புகழ் பரத் & ரக்சிதா பங்கேற்கும் லட்சுமணன் சுருதியின் பிரமாண்டமான இசைநிகழ்ச்சி இரவு 10 மணிக்கு சிவகாசி இந்துநாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News