செய்திகள்
கிருஷ்ணகிரியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்கப்படுகிறதா? என போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் மகராஜகடை போலீசார் காட்டிநாயனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற போகனப்பள்ளி நடேசன் (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் போலீசார் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக அரிகான்கொட்டாய் பகுதியை சேர்ந்த திருப்பதி (42) என்பவரை கைது செய்தனர். போச்சம்பள்ளி போலீசார் கல்லாவி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற சூளகரை தங்கராஜ் (61) என்பவரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடம் இருந்தும் பணம் மற்றும் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.