ஆட்டோமொபைல்
நிசான் மற்றும் டேட்சன் கார்களுக்கு மீண்டும் விலை உயர்வு
நிசான் மற்றும் டேட்சன் பிராண்டு கார் மாடல்களின் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
நிசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு நிசான் மற்றும் டேட்சன் பிராண்டு மாடல்களுக்கு பொருந்தும். இரு பிராண்டு மாடல்களுக்கான விலை உயர்வு ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது.
சரியாக எத்தனை சதவீதம் விலை உயரும் என நிசான் இந்தியா இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு வேறுபடும். கடந்த முறை நிசான் நிறுவன கார் மாடல்களின் விலை 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
கார் மாடல்களின் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. விலை உயர்வில் நிசான் கிக்ஸ், டேட்சன் ரெடி-கோ, கோ மற்றும் கோ பிளஸ் போன்ற மாடல்கள் பாதிக்கப்பட இருக்கிறது.