செய்திகள்
திருட்டு

ஆரணியில் நண்பராக பழகி ரூ.15 லட்சம் பட்டுநூல் திருட்டு

Published On 2020-11-21 09:40 GMT   |   Update On 2020-11-21 09:40 GMT
ஆரணியில் நண்பராக பழகி ரூ.15 லட்சம் பட்டுநூல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 60). முன்னாள் ராணுவவீரர். இவர் சுந்தரம் தெருவில் பட்டு நூல் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் எனது கடைக்கு அடிக்கடி வருவார். இதனால் பழக்கம் ஏற்பட்டது. எனவே நான் அவ்வப்போது வெளியே செல்லும் போதெல்லாம் நண்பர் கந்தசாமியை கடையை பார்க்கச் சொல்லி விட்டு செல்வேன்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடையில் வைக்கப்பட்டுள்ள பட்டுநூல் குறைந்து கொண்டே வந்தது. இதனை கண்காணிக்க கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினேன். அதில் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் கந்தசாமி பட்டு நூலினை திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அவரிடம் விசாரித்ததில் திருடப்பட்ட பட்டு நூலை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பாபு என்பவரிடத்தில் கொடுத்து பணம் பெற்றது தெரியவந்தது. இவ்வாறு ரூ.15 லட்சம் வரை நூல்கள் திருடப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் திருட்டு சம்பந்தமாக கந்தசாமி, பாபு மற்றும் புகார் அளித்த மதியழகன் ஆகிய 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News