ஆன்மிகம்

மரியன்னை பேராலய திவ்ய நற்கருணை பவனி

Published On 2019-06-24 03:04 GMT   |   Update On 2019-06-24 03:04 GMT
திருச்சி ஆலந்தெருவில் உள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலயத்தில் நேற்று மாலை திருப்பலியோடு திவ்ய நற்கருணை பவனி தொடங்கியது.
திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருச்சி ஆலந்தெருவில் உள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலயத்தில் நேற்று மாலை திருப்பலியோடு திவ்ய நற்கருணை பவனி தொடங்கியது. பேராலய பங்கு தந்தை டி.சகாயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை ஏ.சகாயராஜ் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் திவ்ய நற்கருணை பவனியில் பங்கேற்றனர். முன்னதாக அருட்தந்தை விக்டர் ஜெயபாலன் திருப்பலி நடத்தினார்.

திவ்ய நற்கருணை பவனி புனித செல்வநாயகி அம்மாள் ஆலயம் முன்பு தொடங்கி காஜாப்பேட்டை, புதுத்தெரு, ஆர்.சி. காம்பவுண்டு, பூந்தோட்டம், புனித மோட்சராக்கினி மாதா ஆலயம், வேர்ஹவுஸ், மேலப்புதூர் சுரங்கப்பாதை, கான்வென்ட் சாலை வழியாக புனித மரியன்னை பேராலய வளாகத்தை அடைந்தது. இதில் பங்கு பேரவை நிர்வாகிகள், அன்பியங்கள், பக்த சபைகள், இளையோர் இயக்கங்கள் மற்றும் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News