செய்திகள்
கோப்புபடம்.

பல்லடம் அருகே தொழில் நஷ்டத்தால் பேக்கரி உரிமையாளர் தற்கொலை

Published On 2021-10-10 09:55 GMT   |   Update On 2021-10-10 09:55 GMT
கொரோனா தொற்று காரணமாக பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கதிரேசன் தொழில் நஷ்டம் குறித்து நண்பர்களிடம் அடிக்கடி கூறியுள்ளார்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 41). இவர் அதே பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வந்தார். 

இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தொழில் நஷ்டம் குறித்து நண்பர்களிடம் அடிக்கடி கூறியுள்ளார்.

மேலும் பேக்கரியை சரிவர நடத்த முடியாமல் மூடிவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் தனியே இருந்த அவர், வீட்டின் கூரை விட்டத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அவரது தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட கதிரேசனுக்கு தமிழரசி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News