செய்திகள்
ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ்.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Published On 2020-12-13 20:25 GMT   |   Update On 2020-12-13 20:25 GMT
ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களிடையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்துக் கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன. ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவித்து தேர்தலுக்கு ஆயத்தமாகி உள்ளது.

தேர்தல் பணிகளை துரிதப்படுத்த அ.தி.மு.க. மாவட்டங்களைப் பிரித்து கூடுதலாக பொறுப்பாளர்களை அறிவித்தது. கடந்த மாதம் 20-ம் தேதி அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டசபை தேர்தலுக்காக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பணிகள் தொடர்பான அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News