செய்திகள்
காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தம்
நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கிய நிலையில் காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
சென்னை:
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
புயல் கரையை கடந்த பிறகு பாதிப்பு இல்லாத பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முழுவதுமாக கரையை கடக்க அதிகாலை 3 மணியாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.