உள்ளூர் செய்திகள்
.

பணம் திருடிய பள்ளி மாணவன் சிக்கினான்

Published On 2022-04-16 07:33 GMT   |   Update On 2022-04-16 07:33 GMT
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பணம் திருடிய பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி, 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சவுளூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது35). 
இவர், நல்லம்பள்ளியில் சொந் தமாக அக்ரோ சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடையில், 23 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 பென்டிரைவ், சி.சி.டி.வி., கேமரா ஆகியவை திருட்டு போனது.
 
இதுகுறித்து சதீஷ் தொப் பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லம்பள்ளி பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்து வந்தனர். 

இதில்நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவன் கடையில் திருடியது தெரியவந்தது. அவனை பிடித்து, திருடப் பட்ட பணம் மற்றும் கேமரா ஆகியவற்றை போலீசார் மீட் டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
Tags:    

Similar News