உள்ளூர் செய்திகள்
தயாராக உள்ள கனரக வாகன முனையம்.

பேட்டையில் ரூ. 14.67 கோடி மதிப்பில் தயாராக உள்ள கனரக வாகன முனையம்

Published On 2022-04-17 09:24 GMT   |   Update On 2022-04-17 09:32 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 14.67 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கனரக வாகன முனையம் தயார் நிலையில் உள்ளது.
நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதுவரை 32 திட்டப்பணிகள் ரூ.319.02 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 50 திட்டப்பணிகள் ரூ.619.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

நெல்லை மண்டல பகுதியில் உள்ள பேட்டை மற்றும் பழைய பேட்டை இணைப்பு சாலையில் உள்ள புதியதாக கனரக வாகன முனையம் ரூ.14.67 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன சரக்கு முனையத்தில் உணவகங்கள் புக்கிங் அறைகள், ஒட்டுநர் ஒய்வு அறைகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளது.

தற்போது போக்குவரத்-திற்கு வசதியாக சாலை வசதிகள் மேம்படுத்தப்-பட்டுள்ளது. எனவே கனரக ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சாலை ஓரங்களில் ஒரங்களில் வாகனத்தை நிறுத்தாமல் வாகன முனையத்தை பயன்படுத்துமாறு  மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News